Monday, May 27, 2024
Home » நடுரோட்டில் அரை நிர்வாணத்துடன் 2 சிறுவர்கள் போதையில் ரகளை

நடுரோட்டில் அரை நிர்வாணத்துடன் 2 சிறுவர்கள் போதையில் ரகளை

by kannappan

அண்ணாநகர்: கோயம்பேடு 100 அடி சாலையில், கடந்த 2 தினங்களுக்கு முன், இரவு 11 மணிக்கு 2 சிறுவர்கள் நடுரோட்டில் நின்றபடி அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பேருந்து, கார் மற்றும் பைக்குகளை நிறுத்தி தகராறு செய்தனர். அப்போது, அந்த சிறுவர்கள், தங்களின் சட்டையை கழற்றி வைத்துவிட்டு அரை நிர்வாணமாக சாலையில் நின்றுகொண்டு, அவ்வழியே சென்ற வாகனங்கள் மீது மோதுவது போல சென்றனர். மேலும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, கூச்சலிட்டனர். அதுமட்டுமின்றி, தங்களது பைக்கை சாலையின் குறுக்கே நிறுத்தியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த சிறுவர்களை பிடிக்க முயன்றபோது, அவர்களை தாக்குவது போல் வந்து மிரட்டியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பயத்தில் திரும்பி சென்றனர். சிறுவர்களின் செயல்களால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.  தகவலறிந்த   கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த சிறுவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த இருவரும் போதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை பிடித்து, விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன், தான் அணிந்திருந்த பேன்ட்டை கழற்றி தகராறு செய்துள்ளான். இதனால் கோபமடைந்த பொதுமக்கள், போலீசார் முன்னிலையில் அந்த சிறுவனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் பிடியில் இருந்து இரண்டு சிறுவர்களையும் போலீசார் மீட்டனர். விசாரணையில், ரகளையில் ஈடுபட்டவர்களில் ஒரு சிறுவன், தனது செல்போனை ஒரு கடையில் சார்ஜ் போட கொடுத்ததும்,  இதன்பிறகு, அந்த செல்போனை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து  தர வேண்டும் என்று கூறி ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர், சிறுவர்கள் என்பதால் அவர்களின் எதிர்காலம் கருதி, வழக்குப்பதிவு செய்யாமல், அவர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பிவைத்துள்ளனர். நடுரோட்டில் 2 சிறுவர்கள் போதையில் ரகளையில் ஈடுபட்டதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது….

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi