திண்டுக்கல், மே 11: திண்டுக்கல் இந்திய செஞ்சிலுவை சங்க கட்டிடம் கட்டுவதற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் இந்திய செஞ்சிலுவை சங்க கட்டிடம் கட்டுவதற்கான இடத்திற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்திய செஞ்சிலுவை சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளை அலுவலகம் கட்டுவதற்காக, அடியனூத்து கிராமத்தில் 2700 சதுர அடி இடம் செஞ்சிலுவை மாவட்ட கிளை சார்பாக ரூ.20,89,996 அரசுக்கு செலுத்தியும்,மீதி தொகை அரசு மானியமாக கொடுத்தது. இந்த இடத்திற்கான பட்டாவை,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் ரெட் கிராஸ் மாவட்ட அவை தலைவர் நாட்டாமை காஜாமைதீனிடம் வழங்கினர்.நிகழ்ச்சியில், கலெக்டர் விசாகன், திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, மேயர் இளமதி, ரெட் கிராஸ் நிர்வாகிகள் சேக் தாவுது, மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.