ஈரோடு, ஜன.24: ஈரோடு அடுத்த மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் திண்டல் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (24ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காமராஜ் நகர், சாமுண்டி நகர், அரவிந்த் நகர், ராகவேந்திரா நகர், சிவன் நகர், சக்தி நகர் கிழக்கு, பாலாஜி அவன்யூ, டெம்பில் அவன்யூ ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.