ஈரோடு, ஜன.24: சட்டவிரோத மது விற்பனை மற்றும் அனுமதியற்ற இடங்களில் மது அருந்த அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில், மொடக்குறிச்சி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோளக்கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதிப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்து, உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர் மது அருந்த அனுமதித்தற்காக பாசூர், பூமாண்டகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (29) மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
உணவகத்தில் மது அருந்த அனுமதித்தவர் கைது
previous post