புதுக்கோட்டை, மார்ச்7:தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி புதுக்கோட்டையில் சுமார் 600 வழக்குரைஞர்கள் நீதிமன்றப்பணிகளைப் புறக்கணித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் வழக்குரைஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதுக்கோட்டை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சின்னராஜு தலைமையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் கீரனூர், ஆலங்குடி போன்ற நீதிமன்றங்களிலும் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.