பன்ஸ்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் கடோல் பகுதியில், அடையாளம் தெரியாத சில இளைஞர்கள் பெண் ஒருவரை மரத்தில் கட்டிப் போட்டு கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பெண்ணை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ேபாலீஸ் எஸ்பி ராஜேஷ் குமார் மீனா கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட 4 பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மகாவீர் கட்டாராரும் அடங்குவார். அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் மகாவீர் கட்டாராவிடம் ஏற்கனவே பழகி வந்த காதலியிடம், தனது மனைவி பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவர் தனது சகாக்களுடன் சேர்ந்து தனது மனைவியை மரத்தில் கிட்டத்தட்ட 7 மணி நேரம் கட்டிபோட்டு கொடூரமாக தாக்கினர். பெண்ணின் தந்தை கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்’ என்று கூறினார். இச்சம்பவம் குறித்து மாநில காங்கிரஸ் அரசை குறிவைத்து ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்ட பதிவில், ‘காட்டில் சுற்றித் திரியும் ஓநாய்களைப் போன்ற இந்த குண்டர்களுக்கு ராஜஸ்தான் அரசு சுதந்திரம் அளித்துள்ளது. இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்….