கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடியற்காலை 5.40 மணி முதல் காலை 7.50 வரை நன்கு மிதமான மழை பெய்தது. இம்மழை கறம்பக்குடி, அம்புக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நீடித்தது. நன்கு வெயில் வாட்டி வதைத்த வேலையில் நேற்று பெய்த மழையால் வெயிலின் தாக்கம் தனிந்து பூமி குளிர்ச்சி அடைந்தது இந்த மழையின் காரணமாக நிலக்கடலை பயிர் விவசாயம் செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுகாதார வளாகம் கட்ட பக்தர்கள் கோரிக்கை கறம்பக்குடியில் மிதமான மழை
previous post