கும்பகோணம், ஏப். 7: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனம் கடந்த 120 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் 121வது கிளை திறப்பு விழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையன்று 890, பெருமாள் கோவில் தெற்கு வீதி, பந்தநல்லூர் என்ற விலாசத்தில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது.
விழாவில் நிதியின் தலைவர் எம்.பி கல்யாணசுந்தரம் புதிய கிளையை திறந்து வைத்தார். நிதியின் துணைத்தலைவர் எம்.பி ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும், நிதியின் இயக்குநருமான சாக்கோட்டை க.அன்பழகன், மேலாண் இயக்குநர் பி.ஆர்.பி.வேலப்பன், இயக்குநர்கள் பிரகாசம், துரைராஜ், அம்பிகா, குரு பிரசாந்த், நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.