சென்னை: சேத்துப்பட்டு எம்.எஸ்.நகரை சேர்ந்த வினோத் (எ) வினித் (22), கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பட்டா கத்தியுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இது வைரலாக பரவியது. இதை பார்த்த சேத்துப்பட்டு போலீசார், வினோத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், வினோத் மீது குற்றப்பின்னணி எதுவும் இல்லை என்றும், அவர் ஒல்லியாக இருப்பதாக அவரது காதலி முன்பு நண்பர்கள் கேலி செய்ததால், தனது காதலி தன்னை விட்டு சென்று விடுவாரோ என்ற அச்சத்தால், ஜிம்மிற்கு சென்று தனது உடலை மெருகேற்றி பட்டாக்கத்தியுடன் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வினோத்திடம் இனி இதுபோன்ற வீடியோக்கள் பதிவு செய்ய மாட்டேன் என்று கடிதம் எழுதி வாங்கி கொண்டு கடுமையாக எச்சரித்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். வினோத் பதிவு செய்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கினர்….
காதலியை கவரும் ஆசையில் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
previous post