Tuesday, April 30, 2024
Home » காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

by

காஞ்சிபுரம், மார்ச் 27: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் நேற்று காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் ஏலவார்குழலி அம்மை உடனுறை ஏகாம்பரநாதர் சுவாமி கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. 14 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பிரமோற்சவ திருவிழாவில் காலை மற்றும்  மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில்  ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் எழுந்தருளி காஞ்சிபுரம் ராஜ வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று மாலை சிம்ம வாகனம், 27ம் தேதி காலை சூரியப் பிரபை, மாலை சந்திர பிரபை, 28ம் தேதி காலை பூத வாகனம், மாலை  தங்கமயில் வாகனம், 29ம் தேதி காலை  நாக வாகனம், மாலை வெள்ளி இடப வாகனம், 30ம் தேதி காலை வெள்ளி அதிகார நந்தி சேவை, மாலை  ஸ்ரீ கைலாச பீட ராவண வாகனம், விழாவின் முக்கிய உற்சவங்களான மார்ச் 31ம் தேதி பகல் 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி வீதி உலா, அன்று இரவு பிரபல உற்சவமான வெள்ளித்தேர், ஏப்ரல் 1ம் தேதி பகல் இரதோற்சவம், இரவு மகா அபிஷேகம், 2ம் தேதி காலை ஆறுமுகப்பெருமான் எடுப்பு ரத காட்சி, மாலை 5 மணிக்கு பிட்சாடனர் தரிசனம், இரவு வெள்ளி குதிரை வாகனம், 3ம் தேதி பகல் ஆள் மேல் பல்லக்கு, இரவு தல மகிமை காட்சியான வெள்ளி மாவடி சேவை, 4ம் தேதி பகல் சபாநாதர் தரிசனம், இரவு பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் (5ம் தேதி விடியற்காலை), 5ம் தேதி பகல் கந்தப் பொடி உற்சவம், இரவு நூதன வெள்ளி உருத்திரகோடி விமானம், 6ம் தேதி பகல் புருஷாமிருக வாகனம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 7ம் தேதி பகல் சந்திரசேகரர் வெள்ளி இடத்தில் எழுந்தருளிச் சர்வ தீர்த்தத்தில் தீர்த்தவாரி, உற்சவ சாந்தி சிறப்பு, இரவு யானை வாகனத்துடன் கொடி இறக்கம் நடைபெறுகிறது‌. 8ம் தேதி பகல் 108 கலசாபிஷேகம், சங்காபிஷேகம், இரவு பொன் விமானத்தில் திருமுறை உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.இவ்விழாக்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதனால்,  பங்குனி உத்திர திருக்கல்யாண பிரமோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்….

You may also like

Leave a Comment

two + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi