சென்னை: விருது பெற்ற பெருமாள் முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில்: மண்ணோடு இயைந்த மொழி வழக்கைக் கொண்டு எழுதும் பெருமாள் முருகன் ஆளண்டாப்பட்சி நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பான Fire Bird – JCB Prize for Literature எனும் உயரிய விருதை வென்றிருப்பது அறிந்து மகிழ்கிறேன். பெருமாள் முருகன், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப்பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணனுக்கும் பாராட்டுகள்.