ஆர்.எஸ்.மங்கலம், ஆக.24: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறுவதால் மின் வினியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரி அறிவித்துள்ளார். ஆனந்தூர் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்களம், சூரியன் கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுக்குறிச்சி, புத்தூர், ஓடக்கரை, தூவார், ஆயங்குடி, சிறுனாகுடி, பூவாணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆனந்தூர் பகுதியில் இன்று மின்தடை
previous post