தேனி, ஜூலை22:தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க கலை, அறிவியல் கல்லூரியில் ஆட்சி மொழிக்கருத்தரங்கம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் இளங்கோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்திராணி தனியார் தேனி கம்மவார் சங்க கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன், கோட்டூர் அரசு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ராஜராஜன், எழுத்தாளர் தேனிசீருடையான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் உள்ளஅரசுத் துறை அலுவலகங்களில் கோப்புகளை முறையாக தமிழ்மொழியில் கையாண்ட 6 துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் முதல்பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரத்தை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.