விராலிமலை ராகுல் காந்தி மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு கண்டனம் தெரிவித்து விராலிமலையில் காங்கிராசர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஏழுமலை(மேற்கு) தலைமை வகித்தார். இதில் மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி சார்பில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று விராலிமலை காங்கிரசார் சோதனைச் சாவடி அருகே ஒன்று திரண்டு அவ்வழியே வந்த பேருந்துகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நிகழ்வு இடம் வந்த விராலிமலை போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் சட்டையப்பன் (வடக்கு), குமாரசாமி (கிழக்கு), மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மதிமாறன், அழகர்சாமி, நாகராஜன், பாலாஜி, காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.