பெரம்பூர்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மனைவியின் அக்கா கணவர் ஸ்ரீராமுலு(65) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஓட்டேரியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, கனிமொழி எம்பி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், ஏ.வ.வேலு, ரகுபதி, சென்னை மேயர் பிரியா ராஜன், கலாநிதி வீராசாமி எம்பி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்….