சாம்ராஜ்நகர்: ஹனூர் தாலுகா ராமபுரா காவல் நிலையத்துக்குட்பட்ட அஞ்சுபாள்யா கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். விவசாயியான இவர் தன் நிலத்தில் மிளகாய் பயிரிட்டிருந்தார். இவர் மிளகாய் பயிர்களுக்கிடையே கஞ்சா பயிரிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமபுரா போலீசார் சிவகுமார் நிலத்தில் சோதனை நடத்தினர். அப்போது மிளகாய் பயிர்களிடையே கஞ்சா செடி வளர்ப்பதை கண்டுபிடித்த போலீசார் சுமார் 15 கிலோ மதிப்புடைய 9 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர்….
கஞ்சா செடி வளர்த்த விவசாயிக்கு வலை
previous post