சாம்ராஜ்நகர்: இரண்டு வயது குழந்தையுடன் மாயமான மனைவியை கண்டுபிடித்து தரும்படி கணவன் ேபாலீசில் புகார் அளித்ததையடுத்து காணாமல் போன பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ேளகால் தாலுகா சேரம்பள்ளி கிராமத்தை ேசர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி காவ்யா (24). இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. சதீஷ் டிரைவராக உள்ளார். இந்நிலையில் காவ்யாவின் தங்கை ரேகாவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கணவனிடம் கூறிய காவ்யா, தன் குழந்தையுடன் ரேகாவை அழைத்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனை வளாகத்தில் ரேகாவை உட்கார வைத்துவிட்டு காவ்யா குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து அறிந்த சதீஷ் குழந்தையுடன் மாயமான தன் மனைவியை கண்டுபிடித்து தரும்படி கொள்ேளகால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையேற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான காவ்யாவை தேடி வருகின்றனர்….