கோவை: போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் பற்றி ஆபாசமாக பேசிய வழக்கில் யூடியூபர் சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்து உள்ளனர். தேனியில் தங்கும் விடுதியில் இருந்த அவரது அறையில் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவர் தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டிபோலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கரை தேனி மாவட்ட போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர். சங்கர் வைத்த கோரிக்கையின் பேரில் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று அவருக்கு உடல் நிலை பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ ரீதியாக அவருக்கு உடல் பாதிப்பு உள்ளதா? என டாக்டர் குழுவினர் எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து சங்கர் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
previous post