சென்னை: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. செங்கல்பட்டு பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது. ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.