சென்னை: சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததால் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ வளாகத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.