தூத்துக்குடி: திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் நேற்றும் கனமழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் நேற்று 23செ.மீ., காயல்பட்டினத்தில் 21செ.மீ. மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18செ.மீ. மழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் 48 மணி நேரத்தில் 110செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 90செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 19செ.மீ. மழை பெய்துள்ளது.