தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளத்தால் நிறுத்தப்பட்ட ரயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. உணவு, குடிநீர் உடன் மதுரையிலிருந்து சென்ற ரயில்வே குழு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. தேசிய மீட்பு குழுவினர் அங்கு சென்று அடைந்ததும் மீட்பு பணிகள் தொடங்கும். ஸ்ரீவைகுண்டத்தை சூழ்ந்த வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதால், மீட்பு பணியை விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி புறப்பட்ட 800 பயணிகளில் ஏற்கனவே 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 500 பயணிகள் 2ஆவது நாளாக ரயிலில் சிக்கி தவித்துவருபவர்களை மீட்க வியூகம் அமைக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.