சென்னை: மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது அந்த பட்ஜெட்டில் செப்டம்பர் 15ம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.
இதையடுத்து அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிவிப்புக்கு ஏராளமான பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள மகளிர், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், மீனவப் பெண்கள், சாலையோரம் கடை வைத்திருக்கும் மகளிருக்கு உள்ளிட்ட ஒரு கோடி பேருக்கு மாதம் ரூ.1000 வழங்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னை தலைமையை செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர்.15ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடக்கிறது.
மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை, வருவாய், சமூக நலன் சார்ந்த துறைகளின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். வணிகம், கட்டுமானம், சிறிய கடைகள், சிறு தொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் பயன்பெறுவர்.