ஜோலார்பேட்டை: தகாத உறவை கண்டித்ததால் மண் வெட்டியால் தாக்கி கணவனை கொலை செய்த மனைவி, காதலனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஊராட்சிக்குட்பட்ட புத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து ஏலகிரி மலை போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் கொலையானவர் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தராஜ்(38) என்பது தெரியவந்தது. இவருக்கு காளீஸ்வரி(35) என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர்.
காளீஸ்வரியிடம் விசாரித்ததில், தகாத உறவை கணவர் கண்டித்ததால் காதலனுடன் சேர்ந்து கோவிந்தராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காளீஸ்வரி, அதேபகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: காளீஸ்வரிக்கும், கோவிந்தசாமிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கோவிந்தசாமிக்கு மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். ஓராண்டுக்கு முன்பு காளீஸ்வரியும், கோவிந்தசாமியும் வீட்டைவிட்டு வெளியேறினர்.
இதுகுறித்து கோவிந்தராஜ் ஏலகிரி மலை போலீசில் கொடுத்த புகாரின்பேரில், அவர்களை கண்டுபிடித்து தகுந்த அறிவுரைகள் கூறி அனுப்பி ேசர்த்து வைத்தனர். ஆனாலும் காளீஸ்வரி தொடர்ந்து தகாத உறவில் இருந்ததால், கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று(நேற்று முன்தினம்) இரவு மாட்டு கொட்டகையில் காளீஸ்வரியும், கோவிந்தசாமியும் தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். மனைவியை பின்தொடர்ந்து வந்த கோவிந்தராஜ், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் கொட்டகையில் இருந்த மண்வெட்டியால் சரமாரி தாக்கி கோவிந்தராஜை கொலை செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.