நெல்லை: தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் உங்கள் கலாச்சாரம், பண்பாட்டுக்கு தலை வணங்குகிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இருந்துதான் நிறைய செய்திகளையும், தரவுகளையும் நாட்டு மக்கள் அறிய முடியும். என் மீதும் என் குடும்பத்தின் மீதும் அன்பு, பாசத்தை தமிழ்நாடு மக்கள் பொழிகின்றனர். தமிழ்நாடுக்கு வருவதற்கு நான் மிகவும் விரும்புகிறேன். தமிழ்நாட்டு மக்கள் மீது நான் மிகுந்த அன்பு செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.