Tuesday, May 21, 2024
Home » ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 கன்டெய்னரில பணம் பாஜ கொண்டு வந்துருக்கு… அதிமுக பகீர்

ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 கன்டெய்னரில பணம் பாஜ கொண்டு வந்துருக்கு… அதிமுக பகீர்

by Karthik Yash

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நேர்மையாக நடக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சராக போட்டியிடும் பாஜ வேட்பாளருக்கு அரசு இயந்திரங்கள் முழுமையாக தேர்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக துணை நிற்கின்றன. தற்போது வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடப்படுகிறது. இது சம்பந்தமான அரசு துறை ஊழியர்களை தன்வசப்படுத்திக் கொண்டு, அவர்களது விலாசப்பட்டியலை பாஜவினர் கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் நேரிடையாக வீட்டிற்கே சென்று ரூ.500, ரூ.1000 கொடுக்கின்றனர். இது சர்வ சாதாரணமாக வெளிப்படையாக நடக்கிறது. இந்த தேர்தலில் கன்டெய்னர் மூலம் பாஜ வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள். அந்த பணம் முக்கிய நிர்வாகிகளிடம் பிரித்து வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. எனவே, புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

11 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi