ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான படகுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆகின. நேற்று நள்ளிரவு ஒரு சில படகுகள் தீப்பிடித்து எரிந்தன. அப்போது காற்று பலமாக வீசியதால் மற்ற படகுகளுக்கும் தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்து வநத தீயணைப்பு துறையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.