சென்னை: விஜயகாந்த் மறைவில் மனிதம் கற்றுக் கொள்வோம் என்று நடிகர் பார்த்திபன் இரங்கல் தெரிவித்துள்ளார். பிறப்பு என்பது இரு உயிர்களால் இன்னொன்றை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துவது. இறப்பு என்பது அவ்வுயிர் இன்னபிற உயிர்களுக்கு உதவி, பிரிகையில் உலகமே அவ்வுயிருக்காக கண்ணீரோடு வழியனுப்புவது. ஒரு உலகமே கண்ணீரோடு வழியனுப்பதன் மூலம் விஜயகாந்த் மறைவில் மனிதம் கற்றுக் கொள்வோம் என பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.