வேலூர் : வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவினில் போலி பதிவெண் மூலம் பால் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்களைப் பயன்படுத்தி பால் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். வாகன உரிமையாளர் சிவகுமார், ஓட்டுநர் விக்கி மீது 2 பிரிவுகளின் கீழ் சத்துவாச்சாரி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. ஆவின் உதவி மேலாளர் சிவக்குமார் அளித்த புகாரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi