சென்னை: கடந்த 2016 பிப்ரவரி 21ம்தேதி திண்டுக்கல்லில் மதிமுக பொதுக்குழு தொடர்பாக பொதுச் செயலாளர் வைகோ, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் மீது திண்டுக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யகோரி அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 4 மாதங்களில் விசாரணையை முடிக்க திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.