தஞ்சை: காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு, 28வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக ஒன்றிய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், கர்நாடகம் 2023-24ம் ஆண்டுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தரக்கோரியும், அதிமுக சார்பில் தஞ்சை திலகர் திடலில் இன்று மாலை 4 மணியளவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.