சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் பொன்முடியுடன் மூத்த அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய பிறகு டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். ஒன்றிய அரசின் நடவடிக்கை முற்றிலுமாக தவறான நடவடிக்கை. அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொள்ள பொன்முடி தயாராக உள்ளார். மடியில் கனமில்லாததால் அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொள்ள பொன்முடி தயாராக உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.