கொல்கத்தா: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து உண்மைத் தகவலை வெளியிட வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 103 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தைச் சேர்ந்த 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்; 31 பேரை காணவில்லை எனவும் கூறினார்.