நாமக்கல்: நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் மரணமடைந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட தாய் நித்யா, தாத்தா சண்முகம் ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.