திருப்பதி: திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஏர்பேடு அருகே மேலபாகா என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த மும்பையை சேர்ந்த லலித் சிங்கால், அஞ்சு சிங்கால் மற்றும் ஒட்டுநர் முருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.