Friday, May 17, 2024
Home » தமிழகம் முழுவதும் 14 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகம் முழுவதும் 14 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

by Dhanush Kumar

சென்னை: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணை ஆணையர் காளிதாஸ், ஸ்ரீபெரும்புதூர் தனி மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) பொதுமேலாளர் மகாலட்சுமி, தமிழ்நாடு சர்க்கரை கழக பொது மேலாளராகவும், தமிழ்நாடு தகவல் ஆணைய செயலாளர் தனலிங்கம், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன பொதுமேலாளராகவும், சென்னை மாநகராட்சி அம்மா உணவக மாவட்ட வருவாய் சூர்யபிரகாஷ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன(டிட்கோ) தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும்(நில எடுப்பு), தொழிற்கல்வி இயக்குநரக மாநில திட்ட இயக்குநரக திட்ட மேலாளர் பி.எஸ்.விஜயலட்சுமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக பொது மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) பூவராகன், நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநரக நில திட்ட அலுவலராகவும், தமிழ்நாடு வக்பு தீர்ப்பாயத்தின் உறுப்பினர் ராகவேந்திரன், தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழக பொதுமேலாளராகவும், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் (சமூக வலைதளம்) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி பொதுமேலாளராகவும் (நிர்வாகம்), தமிழ்நாடு முன்னாள் படை வீரர் கழக பொது மேலாளர் முத்துச்சாமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இணை ஆணையராகவும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சரவணமூர்த்தி, சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலராகவும் (நிலம் மற்றும் உடைமை), தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்னாள் மேலாண்மை இயக்குநர், தற்போது அதே பதவியிலும், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதி-1 தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) மதுராந்தகி, சேலம் சாலை மேம்பாட்டுத் திட்டம்2 தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும் (நில எடுப்பு), அந்தப் பதவியில் இரந்த கவிதா, ஈரோடு ஆவின் பொது மேலாளராகவும், தமிழ்நாடு நுகர் பொள் வாணிபக் கழக பொது மேலாளர் சுகுமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை சமூக வலைதளம் இணை இயக்குநராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi