மதுரை: சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா? நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வாகைகுளம் சுங்கச்சாவடி இயக்குனரின் அறிக்கை மீது திருப்தியில்லை. வாகைகுளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.