எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கு குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ. 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பு வழங்கியுள்ளார். திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் 2021 நவ.20-ல் கொலை செய்யப்பட்டார். ஆடு திருடர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றபோது 3 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆடு திருடர்களால் எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.