Tuesday, May 28, 2024
Home » திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை திறந்து வைக்க ஜனவரி 19ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை திறந்து வைக்க ஜனவரி 19ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

by Mahaprabhu

திருப்பூர்: இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் மோடி, ஜனவரி 19-ஆம் தேதி தமிழகம் வருகிறார். திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தார். விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சி வந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் மோடி, ஜனவரி 19-ஆம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

twenty − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi