மதுரை: திருச்செந்தூர் கோயிலில் விபூதி கொடுப்பதில் பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. கோயிலில் விபூதி தரும் இடம் மாற்றத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வீரபாகு மூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கூட்டம் அதிகமாக இருந்தாலும் கோயிலை சுத்தமாக வைத்துள்ளதாக நீதிபதி புகழேந்தி பாராட்டு தெரிவித்தார். விபூதி தரும் இடம் குறித்து மனுதாரர் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24க்கு கோர்ட் ஒத்திவைத்தது.