திருவள்ளூர்: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேசன், மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், மாவட்ட துணை செயலாளர்கள் வி.சி.ஆர்.குமரன், உதயமலர் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ப.சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர், நகர மன்ற துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ரா.கிரிராஜன் எம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் திருவள்ளூர் தொகுதி பார்வையாளர் ராஜாகுப்புசாமி, ஒன்றிய செயலாளர் கூளுர் எம்.ராஜேந்திரன், எஸ்.மகாலிங்கம், மோ.ரமேஷ், க.அரிகிருஷ்ணன், டி.கிறிஸ்டி, ஆர்.ஜெயசீலன் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பாகமுகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.