சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாவையொட்டி கிண்டியில் உள்ள அவரது உருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மேயர் பிரியா ஆகியோர் தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.