சென்னை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதிக வரி போடுகிறது ஒன்றிய அரசு என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு வைத்துள்ளார். 2014-ல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ள ஒன்றிய அரசை கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். பாஜக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.