டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது உச்சநீதிமன்றம்.