தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே முகமது பந்தர் பள்ளி வாசல் தலைவருக்கு பார்சலில் மனித மண்டை ஓடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிவாசல் தலைவர் முகமது காசிமுக்கு திருச்சியில் இருந்து வந்த பார்சலில் மண்டை ஓடு இருந்ததாக அவர் போலீசில் புகார் அளித்தார். பார்சலை பறிமுதல் செய்த போலீஸ் மண்டை ஓட்டை அனுப்பியவர் யார்? எதற்காக அனுப்பினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.