சென்னை: தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்ட சோதணை ஓட்டம் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தாமிரபரணி உபரி நீரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்தால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உள்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.