சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனவிழா நாளை (18ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களின்போது மூலவர் ஸ்ரீ நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளும் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பு அம்சமாகும்.
இந்நிலையில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன நாளை (18ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 19ம் தேதி பஞ்சமூர்த்திகள் வெள்ளி மஞ்சைங்களில் வீதி உலா காட்சி நடைபெறுகிறது. 22ம் தேதி கோபுர தரிசனம் எனும் தெரு வடச்சான் உற்சவமும் நடைபெறுகிறது. அதனை அடுத்து ஆருத்ரா தரிசன விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்வு வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 27ம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் அதி காலை 3 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஸ்ரீமந்ஆனந்தான்டவ நடராஜமூர்த்திக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். பின்னர் காலை 7 மணி முதல் ஆயிரங்கால் மண்டப ராஜ சபையில் திருவாபரணம் அலங்காரம் நடைபெறும். அதனை தொடர்ந்து சித்ஸபையில் ரகஸ்ய பூஜை நடைபெறும். பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா காட்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது.