சோங்க்ரான் திருவிழா ‘ தாய்லாந்தின் நீர் விழா ‘ என்று பிரபலமாக அறியப்படுகிறது. திருவிழாவின் போது, தாய்லாந்து நாட்டு தெருக்களில் வயது வேறுபாடின்றி அனைவரும் தண்ணீர் வாளி, கேன், டப்பா, டிரம் என கையில் கிடைத்த பாத்திரங்களுடன் கூடி ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை வாரி இறைத்தும், துப்பாக்கி மூலம் மற்றவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்கின்றனர். ஒருவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால் அவருடைய வாழ்வில் கடந்த காலத்து துன்பங்களையும், துரதிர்ஷ்டங்களை கழுவி சுத்திகரித்துவிட்டு புத்தாண்டில் புதுவாழ்வையும், அதிர்ஷ்டத்தையும் வரவேற்க தயார்படுத்துவதன் அடையாளம்தான் இந்த தண்ணீர் அடிக்கும் பழக்கம் என்கின்றனர் தாய்லாந்து மக்கள்.