நெல்லை: தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வந்தடைந்தார். கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சற்று நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். நெல்லை, தென்காசி, விருதுநகர், குமரி, தூத்துக்குடி, விளவங்கோடு வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்கிறார்.