Thursday, May 16, 2024
Home » பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

by Arun Kumar

திருப்பூர்: பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். 4 பேருக்கு  ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.1,000 அபராதமும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெங்கடேஷ், சோனைமுத்து, செல்லமுத்து, அய்யப்பன் ஆகியோருக்கு நீதிமன்றம் தலா 4 ஆயுள் தண்டனை விதித்தது. வழக்கில் செல்வம் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு இழப்பீடு தரவும் உத்தரவு அளித்துள்ளது. பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த செப்டம்பரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட மோகன்ராஜ், அவரது தாய் உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi